Surprise Me!

Oru naal iravu - Kaaviya thalaivi

2014-11-27 23 Dailymotion

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்

குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே
சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே
ஒரு தயக்கம் பிறந்தது வார்த்தையிலே
தயக்கம் பிறந்தது வார்த்தையிலே

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா
என்னுயிர்த் தாயே நீயும் சுகமா
இருப்பது எங்கே சொல் என்றேன்
அன்னை முகமோ காண்பது நிஜமோ
கனவோ நனவோ சொல் என்றேண்
கனவோ நனவோ சொல் என்றேன்

கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
என் கண்மணி சுகமா சொல் என்றேன்
(வசனம்)
கண்ணா சுகமா கிருஷ்ணா சுகமா
கண்மணி சுகமா சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்

வானத்திலிருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்திலிருந்தே பாடுகிறேன்
எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ்கென வாழ்த்துகிறேன்
நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பே