டோணி, ரெய்னா, மெக்கல்லம் போன்ற அதிரடி நாயகர்களுடன் மீண்டும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காலடி எடுத்து வைக்க உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
முறைகேடு புகார் காரணமாக 2 வருடங்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தவைதான், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்.
தண்டனை காலம் முடிவடைந்த நிலையில், 2018 ஐபிஎல் சீசனுக்கு இவ்விரு அணிகளும் களமிறங்க உள்ளன.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு பதிலாக உருவாக்கப்பட்ட புனே மற்றும் குஜராத் அணிகள் கலைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், டோணி மீண்டும் சிஎஸ்கே அணிக்கே திரும்புவாரா என்ற கேள்வி சென்னை ரசிகர்கள் மனதில் தீயாய் கனன்று வந்தது. வீரர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் ஏலத்தின்போது, டோணியை வேறு அணி எடுக்க வாய்ப்புள்ளதே என்ற கேள்வி ரசிகர்களை துரத்தியது.
ரசிகர்களால், டோணி சென்னையின் மகனாக பார்க்கப்படுவதே இதற்கு காரணம். தமிழக ரசிகர்கள் மட்டுமல்ல, இந்தியா முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் டோணியை சென்னை அணியின் செல்ல பிள்ளையாகத்தான் பார்க்கிறார்களே தவிர ராஞ்சி வீரராக கிடையாது. இந்த நிலையில்தான் சென்னை ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளது ஐபிஎல் நிர்வாக கவுன்சில்.
IPL Governing Council announcing that the IPL franchises, including Chennai Super Kings and Rajasthan Royals, will be allowed to retain five players each. So, it is almost certain that Dhoni will be back in CSK colours in the next season.