இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். இதற்கு பின் அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
இதில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 2018-19-ம் ஆண்டுக்கான விவசாயக் கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்
FM gives importance to agriculture in this Budget 2018. Few months ago while farmers protesting for their life, the central government ignored them purposely.