Surprise Me!

சிறுமியை பலாத்காரம் செய்த கயவர்களை கைது செய்யாமல் இருப்பது ஏன்?- வீடியோ

2018-02-27 118 Dailymotion

விழுப்புரம் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தில் தாய், மகனை கொன்றுவிட்ட 14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது ஏன் என்ற கொந்தளிப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூர் கிராமத்தில் ஆராயி என்ற விதவைப் பெண் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஆராயியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஆராயியின் மகன் சமயனை அடித்தே கொன்றுள்ளனர்.