தமிழகத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை காவு வாங்கும் துறையாகி விட்டதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
தேமுதிக சார்பில் சென்னையில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தற்போது தமிழ்நாட்டில் கொலை கொள்ளைகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் திருச்சி திருவெரும்பூர் காவல்ஆய்வாளர் காமராஜால் தாக்கப்பட்டு உயிரிழந்த உஷா குறித்து பேசிய அவர் காவல்துறை காவு வாங்கும் துறையாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.
DES : Pramalatha Vijayakanth has accused the police of becoming a police procurer to protect Tamil Nadu.