அஜித்தின் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங், வருகிற 23-ம் தேதி முதல் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில், 23-ம் தேதி முதல் வெளிமாநிலங்களிலும் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என உத்தரவு போட்டு அஜித்துக்கு சிக்கல் கொடுத்துதுள்ளார் விஷால்.
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்க விஷயங்களில் அஜித் கலந்துகொள்வதில்லை என்பதால் அவருக்கு சிக்கல் கொடுக்கவே இந்தத் திட்டம் என்கிறார்கள்.
நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இரண்டிலுமே முடிவெடுக்கும் பதவியில் இருக்கிறார் விஷால். அஜித், நடிகர் சங்கத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நடிகர் சங்கத் தேர்தல், கட்டிடம் கட்ட பூஜை என எதிலுமே பங்கேற்பதில்லை. சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திரக் கலைவிழாவில் கூட கலந்து கொள்ளவில்லை.
இதனால் அவரைப் பழிவாங்கத்தான் விஷால் இந்த முடிவை எடுத்ததாகச் சொல்கிறார்கள். விஷால் வேண்டுமென்றே அஜித்துக்கு சிக்கல் ஏற்படுத்தியிருப்பதாகக் கருதுகிறார்கள் சினிமாத்துறையில் இருக்கும் சிலர். உண்மை என்னவோ விஷாலுக்குத்தான் வெளிச்சம்.
Ajith's 'Viswasam' shooting was to begin in Hyderabad Ramoji Rao Film City on March 23rd. Vishal has ordered that the shooting will not be held on or after 23rd of this month. Vishal's action is against Ajith.