Surprise Me!

சாலை ஒய்யாரமாக சென்ற யானை கூட்டம்

2026-05-14 1 Dailymotion

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் செல்லும் சாலையில் காட்டு யானைகள் கூட்டமாக சென்ற வீடியோ இணையத்தில் பரவி வைராகி வருகிறது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்திற்கு உள்பட்ட டாப்ஸ்லிப் பகுதி மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பணிகள் இப்பகுதிக்கு வருகின்றனர். வனத்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் சுற்றுலா பணிகளுக்கு மாலை 4 மணி மேல் அனுமதி இல்லை. இப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி, புள்ளிமான், காட்டு யானைகள் உள்ளட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன. மேலும், மாலை நேரங்களில் வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறை வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதி உண்டு.

இந்நிலையில் காட்டு யானைகள் இரவு நேரத்தில் நீண்ட வரிசையில் செல்லும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் சுற்றுலா பயணிகள் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இச்சம்பவம் குறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், "வனத்துறையினர் மாலை நேரங்களில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.