மதுரை மாவட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டு, தற்போது மூடப்பட்டுள்ள கல் குவாரிகளை தீவிரமாகக் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் குவாரிகள் மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என எச்சரித்த அவர், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். இவற்றுடன், மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனையைச் சீராக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துப் பேசிய அமைச்சர், "அங்கு மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள்; எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடைமுறை கடைபிடிக்கப்பட்டதோ, அதே நடைமுறைதான் தொடரும்" என்றார். திருப்பரங்குன்றம் எப்போதும் போல அமைதியாக நிலவ வேண்டும் என்பதே தவெக அரசின் உறுதியான நிலைப்பாடு என்று குறிப்பிட்ட அவர், முதல்வர் செய்தியாளர்களைச் சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் பாணியில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
#tvknirmal #nirmalkumar #pressmeet #cmvijay #cmvijayspeech #tvkvsdmk #tamilnadu
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D