Surprise Me!

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க விடிய விடிய சோதனை

2026-06-07 1 Dailymotion

திருப்பூர்: போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் மோப்ப நாயின் உதவியுடன் அவிநாசி சாலை வழியாக வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களில் போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். 

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் அசோக் யாதவ் உத்தரவின் பேரில், அவிநாசி துணைக் காவல் கண்காணிப்பாளர் கனகசபாபதி தலைமையில், அவிநாசி காவல் ஆய்வாளர் ராஜபிரபு, உதவி ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட போலீசார் அவிநாசி திருப்பூர் சாலையில் நேற்றிரவு (ஜுன் 6) விடிய விடிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

சேலம் - கொச்சின் பைபாஸ் ஜங்ஷனில் ஒரிசா, பெங்களூரூ, சென்னை, ஹைதராபாத், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோவைக்கு வந்த சொகுசு ஆம்னி பேருந்துகள் மற்றும் வாகனங்களில் போதைப்பொருள் தடுப்பு கண்டுபிடிக்கும் மோப்ப நாய் (மேக்ஸ்) உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: டிராக்டர் ஓட்டிய சிறுவனால் விபரீதம்- 2 வயது குழந்தை உயிரிழப்பு

போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பணியில் மோப்பநாயான மேக்ஸ் பங்கேற்கும் காவல் துறையின் முதல் வாகன சோதனை இதுவாகும். இந்த வாகன சோதனையில் 60க்கும் மேற்பட்ட சொகுசு ஆம்னி, வால்வோ, பேருந்துகள், 25 பார்சல் லாரிகள் மற்றும் வேன்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டனய

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா, உயர் ரக போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்தி வருவதை தடுக்கும் வகையில் இந்த வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவிநாசி காவல் ஆய்வாளர் ராஜபிரபு கூறினார்.