Surprise Me!

மதுபான கடையை இடமாற்ற செய்யக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

2026-06-29 0 Dailymotion

தேனி: மதுபான கடையை இடமாற்றம்  செய்யக் கோரி கிராம மக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தேனி மாவட்டம் சின்னமனூர் மின்நகர் பகுதி அருகே கோகுலம் காலனியில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே செயல்பட்டு வருவதால், அப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும், பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அந்த பகுதி பொதுமக்களுடன் இணைந்து மதுபான கடையினை இடமாற்றம் செய்யக் கோரி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருப்பதாக தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் அனைவரும் இணைந்து டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.