Surprise Me!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

2026-07-05 0 Dailymotion

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அதுமட்டுமின்றி, பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாகவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

அதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும், திருவிழா மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிவது வழக்கம்.

இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், சுபமுகூர்த்த தினம் என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பொது மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசையில், சுமார் 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராட பக்தர்கள் சுமார் 3 மணி காத்திருந்து வருகின்றனர்.

சுபமுகூர்த்த தினம் என்பதால், இன்று சுமார் 50க்கும் மேற்பட்ட திருமணங்களும் இக்கோயிலில் நடைபெற்றன.