Surprise Me!

சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்ற சிறுத்தைகள்- சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

2026-07-26 4 Dailymotion

கோவை: வால்பாறை பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் தனியார் எஸ்டேட்டுகள் அதிக அளவில் உள்ளன. இந்த புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, புலி, கரடி, காட்டுமாடு, வரையாடு, மான்கள் உள்ளிட்ட ஏராளமாக விலங்குகள் வசித்து வருகின்றன.

தற்போது, அந்த வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு சாலை ஓரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தென்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது வால்பாறை பகுதியில் சிறுத்தைகள் எண்ணிக்கை அதிக அளவில் கானப்படுகிறது.

வால்பாறை காமராஜர் காலனி, வாழைத் தோட்டம், புது காலனி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நடமாடும் வீடியோ அதிக அளவில் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வால்பாறை முடீஸ் செல்லும் சாலையில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் குட்டியுடன் ஐந்து சிறுத்தைகள் திடீரென சாலையில் தென்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

சாலையில் குட்டிகளுடன் 5 சிறுத்தைகள் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனத்துறையினர் கூறியபோது, சிறுத்தைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால், மாலை நேரங்களில் குழந்தைகள் முதியோர்கள் வெளியே வர வேண்டாம் எனவும், வேட்டை தடுப்பு காவலர்கள் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.