Surprise Me!

அரசுப் பள்ளி மாணவன் மீது சக மாணவர்கள் தாக்குதல் - வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

2026-08-19 9 Dailymotion

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஒரு மாணவனை சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை, சக மாணவர்கள் அழைத்துக் கொண்டு சென்று, பள்ளியின் வளாகத்தில் வைத்து சரமாரியாக முகத்தில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் அந்த மாணவர் பதிவிட்ட வீடியோ தொடர்பாக சக மாணவர்கள் சேர்ந்து அவரை தாக்கியதாக தெரிகிறது. 

அரசு பள்ளியில் படிக்கும் மாணவனை, சக மாணவர்கள் தாக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமடைந்துள்ளனர். எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுப் பள்ளி வளாகத்தில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.