அரியலூர்: தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் 52வது பிறந்தநாள் மற்றும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 6 கிலோமீட்டர் தொலைவிற்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஆண்டிமடம் அருகே கருக்கை கிராமத்தில் இருந்து துவங்கிய மாரத்தான் போட்டியினை, ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் வேலுசாமி துவக்கி வைத்தார்.
இந்த மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது போதை இல்லா தமிழ்நாடு, போதையில்லா இளைஞர்கள், முழு உடல் திறன் மேம்பாடு, யோகா நிலைகள், பயிற்சிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத்தொடர்ந்து மாரத்தான் போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்த வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். தவெக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் தனது பிறந்தநாளை நாளை (ஜூன் 22) கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தவெக கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.